» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஈஸ்டர் பண்டிகை: கரை திரும்பிய குளச்சல் விசைப்படகு மீனவர்கள்!
வியாழன் 28, மார்ச் 2024 11:30:31 AM (IST)
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற குளச்சல் விசைப்படகு மீனவர்கள் கரை திரும்பினர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. இந்நிலையில் வரும் 31 ம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இது கிறிஸ்துமஸ் பண்டிகையை
கிறிஸ்துமஸ் பண்டிகையை அடுத்து கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகையாகும். பண்டிகைகளை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்புவது வழக்கம். கரை திரும்பும் விசைப்பகினர் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடுவர். இதற்காக ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பிய வண்ணம் உள்ளது. கரை திரும்பிய விசைப்படகுகள் குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன.
இன்ற மாலைக்குள் அனைத்துபடகுகளும் கரை திரும்பி விடும் என மீனவர்கள் தெரிவித்தனர். கரை திரும்பும் விசைப்படகினர் இன்றிரவு ஆலயங்களில் நடக்கும் பெரிய வியாழன் பாதம் கழுவும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர். நாளை புனித வெள்ளிக்கிழமை சிலுவைப்பாடு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு 31 ம் தேதி ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகின்றனர். பின்னர் ஏப்ரல் 1 ம் தேதிமுதல் விசைப்படகினர் மீண்டும் கடலுக்கு செல்கின்றனர்..