» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்: திற்பரப்பு அருவியில் உற்சாக குளியல்!!

புதன் 17, ஜனவரி 2024 10:25:35 AM (IST)

பொங்கல் மற்றும் காணும் பொங்கலை முன்னிட்டு கன்னியாகுமரியில் லட்சக் கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். 

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் குமரி மாவட்டத்துக்கு வந்துள்ளனர். அதிலும் முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் குவிந்தனர். அருவிப்பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா, நீச்சல் குளம் என எங்கு பார்த்தாலும் கூட்டம் அலைமோதியது. அதைத்தொடர்ந்து அவர்கள் அருவியின் மேல் பகுதிக்கு சென்று தடுப்பணையில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

கன்னியாகுமரியிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை காண திரண்டனர். அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் புனித நீராடி விட்டு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

விவேகானந்தா கேந்திர வளாகத்தில் உள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதே போல் மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, வட்டக்கோட்டை, லெமூரியா கடற்கரை உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory