» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
உலக திறன் போட்டிகள் தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு - ஆட்சியர் தகவல்!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 4:24:41 PM (IST)
நாகர்கோவிலில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி திறன் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வம் கொண்டு கன்னியாகுமரி மாவட்டத்தை சோந்த சுமார் 748 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர். முதற்கட்டமாக மேற்படி போட்டியாளர்களின் திறன்களை சோதித்தறியும் விதமாக மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் 24.09.2023 தேதியில் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரி, நாகர்கோவிலில் வைத்து கொள்குறி வடிவிலான தேர்வாக நடைபெறவுள்ளது.
காலை 11.00 மணி முதல் மதியம் 12.00 வரை நடைபெறவுள்ள மேற்படி தேர்விற்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களின் தேர்வு நுழைவுச்சீட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் https://naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் மேற்படி இணையதளத்தில் சென்று தங்கள் தேர்வு நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது குறித்து மேலும் விவரங்களுக்கு நாகர்கோவில், கோணம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இயங்கும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04652-264463 / 9443579558 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 9, மே 2025 4:00:54 PM (IST)

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்ய சிறப்பு முகாம்: ஆட்சியர்
வெள்ளி 9, மே 2025 3:44:06 PM (IST)

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

பிளஸ் 2 மாணவருடன் பள்ளி மாணவி ஓட்டம்? குமரி அருகே பரபரப்பு
வியாழன் 8, மே 2025 5:24:43 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 7, மே 2025 5:14:58 PM (IST)
