» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் திடீர் மாயம் : போலீசார் விசாரணை!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 12:08:36 PM (IST)
ஏரல் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சித்திரை பாண்டியன். இவரது மகள் முத்து பிரியா (25), அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாம். இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி பள்ளிக்கு சென்றவர் பின்பு வீடு திரும்பவில்லை.
அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை. இது குறித்து அவரது தந்தை சித்திரைப் பாண்டியன் ஏரல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமீதா வழக்கு பதிவு செய்துள்ளார். அவர், மாப்பிள்ளை பிடிக்காததால் வீட்டை விட்டு சென்றாரா? அல்லது வேறு எதுவம் காரணம் உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 9, மே 2025 4:00:54 PM (IST)

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்ய சிறப்பு முகாம்: ஆட்சியர்
வெள்ளி 9, மே 2025 3:44:06 PM (IST)

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

பிளஸ் 2 மாணவருடன் பள்ளி மாணவி ஓட்டம்? குமரி அருகே பரபரப்பு
வியாழன் 8, மே 2025 5:24:43 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 7, மே 2025 5:14:58 PM (IST)

NALLAVANSep 22, 2023 - 04:03:51 PM | Posted IP 172.7*****