» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மது பிரியர்களின் பார் ஆக மாறும் பூங்கா: மேயர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

புதன் 20, செப்டம்பர் 2023 8:49:48 PM (IST)



தூத்துக்குடியில் பூங்காக்களை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் மேயருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பூபால ராயபுரம் கருப்பட்டி சொசைட்டி ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள 2 பூங்காக்களில் உள்ள சிறுவர் சிறுமியர்கள் பொழுது போக்குக்காக விளையாடக்கூடிய விளையாட்டு உபகரணங்கள் மிகவும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது அதன் சுற்றுச்சுவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

மேலும் அதன் எதிர்புறம் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடையில் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு வரும் நபர்கள் பூங்கா உள்ளே அமர்ந்து பார்போல் மது அருந்துவதும், கெட்ட கெட்ட தகாத வார்த்தைகளை பேசிக்கொண்டும் அமர்ந்திருப்பதனால் பூங்காவிற்கு பொதுமக்களும், குழந்தைகளும் வருவதில் மிகவும் அச்சப்படுகின்றனர். ஆகவே தயவு கூர்ந்து மேற்படி பூங்காக்களை உரிய முறையில் பராமரித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக உருவாக்கித் தரும்படி கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து

ஏரியா காரன்Sep 21, 2023 - 08:42:02 AM | Posted IP 162.1*****

அதுமட்டுமல்ல, ஸ்மார்ட் சிட்டி ஆனவுடன், குடிகாரர்கள் வந்து போகும் தெருவெல்லாம் மூத்திர வாடை எல்லாம் வருது, தெருவில் செல்லும்போது குடல் புடுங்க வாந்தி வருது. நாத்தம் தாங்க முடியேல, அங்காங்கே மதுபான பாட்டில்கள். ஒயின் ஷாப்ஐ காலிபண்ணுவதே தான் சரியான தீர்வு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory