» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் : குழித்துறை தடுப்பணையில் பொதுமக்கள் நடந்து செல்ல தடை!
புதன் 20, செப்டம்பர் 2023 10:49:16 AM (IST)
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குழித்துறை தடுப்பணை வழியாக பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் குளுமையான தட்ப-வெப்ப நிலை நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் மாலையில் இருந்து நள்ளிரவு வரை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் பாய்கிறது. இந்த வெள்ளம் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையை மூழ்கடித்து செல்கிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்தோ, இருசக்கர வாகனங்களிலோ செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பணை வழியாக யாரும் செல்லாதவாறு கம்பியால் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்ய சிறப்பு முகாம்: ஆட்சியர்
வெள்ளி 9, மே 2025 3:44:06 PM (IST)

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

பிளஸ் 2 மாணவருடன் பள்ளி மாணவி ஓட்டம்? குமரி அருகே பரபரப்பு
வியாழன் 8, மே 2025 5:24:43 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 7, மே 2025 5:14:58 PM (IST)

இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்த முயற்சி: 4பேர் கைது!
புதன் 7, மே 2025 5:12:36 PM (IST)
