» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் முகாம் : செப்.23ல் நடக்கிறது - ஆட்சியர் தகவல்

செவ்வாய் 19, செப்டம்பர் 2023 5:27:17 PM (IST)

குமரி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவாதம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது.

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவாதம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 23.09.2023 அன்று சரியாக 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. 

எனவே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களைச் சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர்களைச் சார்ந்தோர்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை உரிய விண்ணப்பமாக இரட்டை பிரதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் நேரில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.பஸ்ரீதர்  கேட்டுக் கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory