» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தொண்டு நிறுவனம் பெயரில் மருத்துவர்களிடம் பண மோசடி: பெண் உள்பட 2 பேர் சிக்கினர்!

செவ்வாய் 19, செப்டம்பர் 2023 12:37:16 PM (IST)

தொண்டு நிறுவனத்துக்கு உதவும்படி கூறி ஆசாரிபள்ளம் அரசு அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் ரூ.50 ஆயிரம் வாங்கி மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் மாலை ஒரு வாலிபரும், ஒரு பெண்ணும் வந்தனர். அவர்கள் மருத்துவமனை ஊழியர்களிடமும், டாக்டர்களிடமும் தாங்கள் தனியார் தொண்டு நிறுவனத்தில் இருந்து வருவதாகவும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்ய ஏதாவது பணம் தருமாறும் கூறினார்கள். அதை உண்மை என்று நம்பி டாக்டர்களும், பயிற்சி டாக்டர்களும் பணம் கொடுத்தனர். அந்த வகையில் ரூ.50 ஆயிரம் வரை அவர்கள் வசூல் செய்தனர்.

இதற்கிடையே சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனம் உண்மைதானா? என்று ஆன்லைனில் பயிற்சி டாக்டர்கள் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கூறியது போன்ற தொண்டு நிறுவனம் எதுவும் இல்லை என்பதும், 2 பேரும் தொண்டு நிறுவனத்தின் பெயரில் பணம் வாங்கி மோசடி செய்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 2 பேரையும் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பயிற்சி டாக்டர்கள் பிடித்து ஆசாரிபள்ளம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட ஆண் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், பெண் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory