» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு சரமாரி அரிவாள் வெட்டு: காதல் கணவர் வெறிச்செயல்!

சனி 1, அக்டோபர் 2022 8:18:41 AM (IST)

நாகர்கோவில் அருகே ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண்ணை நடுரோட்டில் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிய காதல் கணவரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில் அருகே உள்ள கீழ மறவன்குடியிருப்பை சேர்ந்தவர் சோனியா (32). கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையால்விளை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (38). இவர்கள் 2 பேரும் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அபினாஷ் (12), அபி நிஷாந்த் (10) என்ற 2 மகன்கள் உள்ளனர். திருமணமான 4 வருடங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஜெயராஜை விட்டு பிரிந்து சோனியா தனியாக வசித்து வந்தார். மேலும் இதுதொடர்பாக விவாகரத்து வழக்கும் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இதனை தொடர்ந்து சோனியா ஈத்தாமொழி அருகே உள்ள மணியன்விளையில் 2 மகன்களுடன் வசித்தார். ஜெயராஜ் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்தநிலையில் நேற்று மாலையில் தன்னுடைய இளைய மகன் அபி நிஷாந்த்துடன் சோனியா சுசீந்திரம் ஆஸ்ரமம் சந்திப்பில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த ஜெயராஜ், சோனியா சென்ற ஸ்கூட்டரை வழிமறித்து நிறுத்தியுள்ளார். பின்னர் வழக்கை வாபஸ் பெற்று விட்டு தன்னுடன் சேர்ந்து வாழும்படி சோனியாவிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயராஜ் ஆட்டோவில் வைத்திருந்த அரிவாளை எடுத்து வந்து சோனியாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். தலை, கை, கால், முதுகு உள்ளிட்ட பல இடங்களில் வெட்டு விழுந்தது. அப்பா அம்மாவை விட்டுறங்க, விட்டுறங்க என அபி நிஷாந்த் கதறி அழுததையும் பொருட்படுத்தாமல் ஜெயராஜ் ஆத்திரம் தீர சோனியாவை வெட்டினார். இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் சுருண்டு விழுந்தார். நடுரோட்டில் நடந்த தாக்குதலை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள், ஜெயராஜை மடக்கி பிடித்து சுசீந்திரம் போலீசில் ஒப்படைத்தனர்.

மேலும் உயிருக்கு போராடிய சோனியாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுதொடர்பாக சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெயராஜை கைது செய்தார். நடுரோட்டில் மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து

gehehOct 1, 2022 - 12:47:28 PM | Posted IP 162.1*****

திருடன் குடியிருப்பு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory