» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பெண்ணை தாக்க முயன்றதாக சர்ச்சை வீடியோ : போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம்!
வியாழன் 29, செப்டம்பர் 2022 4:32:10 PM (IST)
பெண்ணை தாக்க முயல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் சப் இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு சப்- இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தவர் முரளிதரன். இவர் நடுவூர் கரையில் புகார் மனு ஒன்று தொடர்பாக விசாரணைக்கு சென்றிருந்தார். அப்போது பெண் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணைக்கு சென்ற பெண் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரனிடம் அத்துமீறி பேசியதாக தெரிகிறது.
இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணை தாக்க முயல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் திடீரென இடமாற்றம் செய் யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாவட்ட எஸ்பி ஹரிகிரண் பிரசாத் பிறப்பித்துள்ளார். மண்டைக்காடு காவல் நிலையத்திலிருந்து சப்- இன்ஸ்பெக்டர் முரளிதரன் நாகர்கோவில் நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.