» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தனியார் கல்லூரியில் கொள்ளையடித்த வாலிபர் கைது: பணம்-நகை மீட்பு

சனி 14, மே 2022 4:43:23 PM (IST)

மார்த்தாண்டத்தில் தனியார் கல்வி நிறுவனத்தில் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகை, பணம் மீட்டப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வடக்கு தெருவில் ஞானதீபம் என்ற பெயரில் சமுதாய கல்லூரி உள்ளது. இதை மார்த்தாண்டம் அருகே உள்ள பேரை பகுதியை சேர்ந்த தோமஸ்ராஜ் நடத்தி வருகிறார். கடந்த 9-ந் தேதி மாலையில் வழக்கம் போல் கல்லூரியை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது அலுவலக அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 96 ஆயிரம் பணம், 1½ பவுன் தங்க மோதிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. 

இதுதொடர்பாக தோமஸ்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைத்தனர். தனிப்படை போலீசார் கல்லூரியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த போது ஒரு வாலிபரின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் மார்த்தாண்டம் குருவிக்காட்டுவிளையை சேர்ந்த ரங்கநாதன் மகன் பிரகாஷ் (27) என்பது தெரியவந்தது. 

இவர் ஏற்கனவே குறுந்தாடி வைத்திருந்தார். கல்லூரியில் கொள்ளையடித்த பின்பு அடையாளம் தெரியாமல் இருக்க தாடியை எடுத்துவிட்டதும் தெரியவந்தது.  இதையடுத்து போலீசார் பிரகாசின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். அவரிடம் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் கல்லூரியில் கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டார். கொள்ளையடித்த தங்க மோதிரத்தை காப்புக்காட்டில் அடகு வைத்திருப்பதாக கூறினார். இதையடுத்து போலீசார் அங்கு சென்று நகையை மீட்டனர். மேலும் அவரிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தையும் போலீசார் மீட்டனர். கொள்ளை நடந்த 4-வது நாளிலேயே கொள்ளையனை கைது செய்து பணமும், நகையும் மீட்ட போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory