» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இரட்டை ரயில் பாதை இணைப்பு பணி: ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் அறிவிப்பு
செவ்வாய் 19, ஏப்ரல் 2022 5:54:11 PM (IST)
தென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில் - பெங்களூரு - நாகர்கோவில் விரைவு ரயில் பெங்களூர் அருகே உள்ள கார்மேலரம் என்ற ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி பெங்களூரு - நாகர்கோவில் விரைவு ரயில் (17235) மற்றும் நாகர்கோவில் - பெங்களூரு விரைவு ரயில் (17236) ஆகியவை கார்மேலரம் ரயில் நிலையத்திற்கு முறையே மாலை 05.39 மற்றும் காலை 07.29 மணிக்கு வந்து சேர்ந்து மாலை 05.40 மற்றும் காலை 07.30 மணிக்கு புறப்படும். இந்த புதிய வசதியை ஏப்ரல் 15 முதல் அக்டோபர் 14 வரை ஆறு மாதத்திற்கு பரிசோதனை அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்ட பயணிகள், போக்குவரத்து நெருக்கடி நிறைந்த பெங்களூர் சென்று சுற்றிவர வேண்டியதில்லை.
திருநெல்வேலி - நாகர்கோவில் பிரிவில் வள்ளியூர் - ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு வேலைகள் நடைபெற இருக்கின்றன. எனவே இந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி
1) திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில் (22627/22628) ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 29 வரை திருநெல்வேலி - திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
2) ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 28 வரை தாம்பரத்திலிருந்து இரவு 11.00 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் (20691) திருநெல்வேலி - நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 29 வரை நாகர்கோவிலில் இருந்து மாலை 03.50 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (20692) நாகர்கோவில் - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
3) ஏப்ரல் 24 அன்று புதுச்சேரியிலிருந்து மதியம் 12.00 மணிக்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரயில் (16861) மற்றும் ஏப்ரல் 25 அன்று கன்னியாகுமரியிலிந்து மதியம் 01.50 மணிக்கு புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - புதுச்சேரி விரைவு ரயில் (16862) ஆகியவை திருநெல்வேலி - கன்னியாகுமரி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
4) ஏப்ரல் 28 அன்று சென்னையில் இருந்து மாலை 06.55 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் (12667) மற்றும் ஏப்ரல் 29 அன்று நாகர்கோவிலில் இருந்து மாலை 04.15 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வாராந்திர விரைவு ரயில் ஆகியவை திருநெல்வேலி - நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
5) ஏப்ரல் 29 அன்று கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் விரைவு ரயில் (12634) கன்னியாகுமரியில் இருந்து 45 நிமிடங்கள் காலதாமதமாக மாலை 05.50 மணிக்கு புறப்படும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

பிளஸ் 2 மாணவருடன் பள்ளி மாணவி ஓட்டம்? குமரி அருகே பரபரப்பு
வியாழன் 8, மே 2025 5:24:43 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
புதன் 7, மே 2025 5:14:58 PM (IST)

இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை பாலியல் தொழில் ஈடுபடுத்த முயற்சி: 4பேர் கைது!
புதன் 7, மே 2025 5:12:36 PM (IST)

பயிற்சி மாணவர்கள் நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம் செய்யக்கூடாது: ஆட்சியர் அறிவுறுத்தல்
புதன் 7, மே 2025 12:32:08 PM (IST)
