» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

படகு கவிழ்ந்து மீனவர் பலி: சமூக வலைத்தளங்களில் பரவும் வீடிேயாவால் பரபரப்பு

செவ்வாய் 20, ஜூலை 2021 4:27:38 PM (IST)

தேங்காப்பட்டணத்தில் படகு கவிழ்ந்து மீனவர் பலியான வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தேங்காப்பட்டணம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த 17-ந் தேதி காலையில் படகில் மீன்பிடிக்க சென்றுவிட்டு மாலையில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் நுழைய முயன்றனர். அவர்கள் துறைமுக முகத்துவார பகுதியில் வந்த போது ராட்சத அலையில் படகு சிக்கி கவிழ்ந்தது.  இதில் 6 மீனவர்கள் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் இனையம்புத்தன்துறையை சேர்ந்த ஆன்டனி பிரிட்டன் ராஜா என்ற மீனவர் படகின் அடிப்பகுதியில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குமரி மாவட்ட மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், தற்போது படகு அலையில் சிக்கி கவிழும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகி உள்ளது. அதில் முகத்துவாரத்தில் 2 படகுகள் நுழைய முயல்கின்றன. அப்போது, ஒரு ராட்சத அலை எழுந்து படகுகள் மீது பயங்கரமாக மோதுகிறது. இதில் ஒரு படகு அலையின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் நிலைதடுமாறி கவிழ்கிறது. மற்றொரு படகு அலையில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பி செல்கிறது. இந்த வீடிேயா காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory