» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தென் ஆப்ரிக்காவில் கால்பந்து வீரர் சுட்டுக் கொலை: கடத்தல் கும்பல் வெறிச்செயல்
வெள்ளி 5, ஏப்ரல் 2024 4:07:42 PM (IST)
தென் ஆப்ரிக்காவில் கால்பந்து வீரர் லுாக் பிலுயர்ஸ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கால்பந்து வீரர் லுாக் பிலுயர்ஸ் (24) என்பவர் கடத்தல் காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) தென் ஆப்ரிக்க அணிக்காக பங்கேற்றவர். பிரபல கெய்சர் சீப்ஸ் கிளப் அணிக்காக விளையாடினார்.
சம்பவத்தன்று ஜோகனஸ்பர்க் புறநகர் பகுதியில் காரில் சென்ற லுாக் பிலுயர்ஸ், ஹனிடியு என்ற இடத்தில் பெட்ரோல் நிரப்ப காத்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த கடத்தல்காரர்கள் துப்பாக்கி முனையில் காரை விட்டு இறங்கும்படி மிரட்டியுள்ளனர். பின் பிலுயர்சை மார்பில் சுட்டுக் கொன்றுவிட்டு, காரை கடத்திச் சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.