» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தென் ஆப்ரிக்காவில் கால்பந்து வீரர் சுட்டுக் கொலை: கடத்தல் கும்பல் வெறிச்செயல்

வெள்ளி 5, ஏப்ரல் 2024 4:07:42 PM (IST)

தென் ஆப்ரிக்காவில்  கால்பந்து வீரர் லுாக் பிலுயர்ஸ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென் ஆப்ரிக்காவில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கால்பந்து வீரர் லுாக் பிலுயர்ஸ் (24) என்பவர் கடத்தல் காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) தென் ஆப்ரிக்க அணிக்காக பங்கேற்றவர். பிரபல கெய்சர் சீப்ஸ் கிளப் அணிக்காக விளையாடினார்.

சம்பவத்தன்று ஜோகனஸ்பர்க் புறநகர் பகுதியில் காரில் சென்ற லுாக் பிலுயர்ஸ், ஹனிடியு என்ற இடத்தில் பெட்ரோல் நிரப்ப காத்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த கடத்தல்காரர்கள் துப்பாக்கி முனையில் காரை விட்டு இறங்கும்படி மிரட்டியுள்ளனர். பின் பிலுயர்சை மார்பில் சுட்டுக் கொன்றுவிட்டு, காரை கடத்திச் சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory