» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவை தாக்கிய சக்திவாய்ந்த புயல்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

திங்கள் 11, டிசம்பர் 2023 11:44:25 AM (IST)



அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சக்திவாய்ந்த புயல் தாக்கியதில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தை சக்திவாய்ந்த புயல் தாக்கியது. பலத்த காற்று வீசியதில் பல வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. மேலும் பல வாகனங்கள் சாலைகளில் கவிழ்ந்து கிடந்தன. புயலை தொடர்ந்து கென்டக்கி, நாஷ்வில்லி, மாண்ட்கோமெரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள குடியிருப்பு பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. எனவே பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்தது.

இதற்கிடையே கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பல வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புயல் முன்னெச்சரிக்கை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் சுமார் 85 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory