» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆசியாவில் முதன்முறையாக தன்பாலின திருமணத்திற்கு நேபாளம் சட்ட அனுமதி!

வெள்ளி 1, டிசம்பர் 2023 11:20:56 AM (IST)



ஆசியாவில் முதன்முறையாக தன்பாலின திருமணத்திற்கு நேபாளம் அரசு சட்ட அனுமதி அளித்துள்ளது. 

நேபாள நாட்டில் கடந்த 2007ம் ஆண்டு தன்பாலின திருமணத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதை தொடர்ந்து 2015ல் நேபாள அரசியல் அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி திருநங்கை மாயா குருங் உள்பட பலர் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த நீதிமன்றம் தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்க இடைக்கால தடை விதித்தது. இதனால் நவல்பரசி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை மாயா குருங் மற்றும் ஓரினச்சேர்கையாளர் சுரேந்திர பாண்டே திருமண விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இருப்பினும் குடும்பத்தினர் அனுமதியுடன் அவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்தனர். நேபாள உச்ச நீதிமன்றம் அவர்கள் மனுவை விசாரித்து வந்தது. தற்போது அவர்கள் திருமணத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து அவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதனால் தெற்கு ஆசியாவில் முதன்முறையாக தன்பாலின திருமணத்திற்கு அனுமதி வழங்கிய நாடு என்ற பெயரை நேபாளம் பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory