» செய்திகள் - விளையாட்டு » உலகம்

எதிரிகளுக்கு வைத்த பொறியில் சிக்கிய சீன நீர்மூழ்கி கப்பல்: 55 பேர் பலியானதாக தகவல்!

வெள்ளி 6, அக்டோபர் 2023 12:49:53 PM (IST)



சீன கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் பொறியில் சிக்கி 55பேர் உயிரிழந்துள்ளதாக இங்கிலாந்து ஊடகம் தெரிவித்துள்ளது. 

சீனா-கொரிய தீபகற்பம் இடையே உள்ள மஞ்சள் கடல் பகுதியில் இரும்பு சங்கிலியால் உருவாக்கப்பட்ட ஒரு கடல்பொறியை சீனா அமைத்துள்ளது. எதிரி நாடுகளின் கப்பல்கள் தங்களது எல்லைக்குள் நுழைவதை தடுக்க சீனாவால் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தன்கையால் தனது கண்ணையே குத்திக்கொள்வது போல அங்கு ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

அதாவது சீன கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் ஒன்று அந்த பொறியில் சிக்கி கொண்டது. மேலும் அந்த சங்கிலியில் நங்கூரம் மோதியதால் அந்த கப்பல் சேதமடைந்தது. இதனையடுத்து அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு கப்பலுக்குள் இருந்த 21 கடற்படை வீரர்கள் உள்பட 55 பேர் மூச்சுத்திணறி பலியானதாக இங்கிலாந்தில் உள்ள ஒரு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இதனை சீனா ரகசியமாக வைத்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை சீனா முற்றிலும் மறுத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory