» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தென் ஆப்பிரிக்கா ஐந்து மாடி கட்டிடத்தில் தீ விபத்து: உயிரிழப்பு 73 ஆக அதிகரிப்பு!

வியாழன் 31, ஆகஸ்ட் 2023 5:32:17 PM (IST)



தென் ஆப்பிரிக்காவில்  ஐந்து மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. 

தென் ஆப்பிரிக்காவின் முக்கிய வணிக மாவட்டமாக கருதப்படுவது ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து  தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். இன்று காலையில் தான் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாகவும் ஆனாலும் கட்டடத்திலிருந்து புகை வெளியேறி கொண்டிருந்தன. 

தீ விபத்து நேரிட்ட கட்டடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி உடனடியாக துவங்கப்பட்டாலும் 64 பேரின் உடல்கள் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளது. 43 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. இதுவரை கட்டடத்தில் இருந்து 73 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory