» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கிழக்கு சீனாவில் கனமழை: 5 பேர் உயிரிழப்பு; 1500 பேர் வெளியேற்றம்!

ஞாயிறு 23, ஜூலை 2023 8:22:53 PM (IST)



கிழக்கு சீனாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,500-க்கும் அதிகமானோர் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்

கிழக்கு சீனாவில் கனமழையால் பெரிய அளவில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 1,600-க்கும் அதிகமான வீடுகளில் மின்சார இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. 1,500-க்கும் அதிகமானோர் தங்களது இருப்பிடங்களில் இருந்து பத்திரமான பகுதிக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 

வடக்கு சீனாவில் சில பகுதிகளில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. கிழக்கு சீனாவில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட நிலையில், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory