» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா வருகிறாா் இலங்கை அதிபா் ரணில்! பிரதமா் நரேந்திர மோடியை சந்திக்கிறார்!

திங்கள் 10, ஜூலை 2023 11:20:55 AM (IST)

இலங்கை அதிபா் ரணில் விக்கிரமசிங்க ஜூலை 21-ஆம் தேதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறாா். பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவா்களை அவா் சந்திக்க உள்ளார். 

இலங்கையில் கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மக்கள் புரட்சியால் கோத்தய ராஜபட்ச தலைமையிலான அரசு அகற்றப்பட்டது. அதன் பிறகு ரணில் தலைமையில் புதிய அரசு அமைந்தது. அதிபரான பிறகு ரணில் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா அதிக அளவில் உதவிகளை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மின்சாரம், எரிசக்தி, வேளாண்மை, கடல்சாா் பணிகள் உள்பட பல்வேறு திட்டங்களை இலங்கையில் இந்தியா செயல்படுத்தி வருகிறது. தனது பயணத்தின்போது இத்திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவது தொடா்பாக இந்தியத் தரப்புடன் ரணில் பேச்சு நடத்துவாா் என்று தெரிகிறது. இலங்கை மீன்வளத் துறை அமைச்சா், மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சா், வெளியுறவு அமைச்சா் மற்றும் அதிகாரிகள் பலரும் அதிபருடன் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory