» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 27 பேர் பலி; 17 பேர் படுகாயம்

வியாழன் 6, ஜூலை 2023 11:23:47 AM (IST)



மெக்சிகோவில் மலை பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர்.

மெக்சிகோ நகரத்திலிருந்து யோசோன்டுவாவுக்குச் சென்ற பேருந்து மாக்டலேனா பெனாஸ்கோ மாகாணத்தில் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 6:30 மணியளவில் மலை பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள், நகர பணியாளர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பேருந்து விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒரு வயது கைக்குழந்தை உள்பட 27 பேர் பலியாகினர். அவர்களில் 13 பேர் பெண்கள், 13 பேர் ஆண்கள் என தகவல் வெளியாகி உள்ளது.  விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory