» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் இந்திய தூதரத்திற்கு தீ வைப்பு: காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டகாசம்!

செவ்வாய் 4, ஜூலை 2023 11:29:36 AM (IST)



அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய துணை தூதரகத்திற்கு தீ வைத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் சான்-பிரான்சிஸ்கோ நகரில் இந்தியாவின் துணை தூதரகம் அமைந்துள்ளது. இந்த தூதரகத்திற்கு கடந்த 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலிஸ்தான் ஆதரவாளரகள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இந்த தீவைப்பு சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் துணை தூதரகத்தை எரிபொருளை ஊற்றி எரித்துள்ளார். இதனால், அப்பகுதி முழுக்க கொழுந்துவிட்டு எரிந்த தீயால் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதன் பின்னர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த தீ வைப்பு சம்பவத்தில் உயிரிழப்புகள் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. காலிஸ்தானி ஆதரவாளர்களால் கடந்த 5 மாதங்களில் இந்திய தூதரகம் மீதான இரண்டாவது தாக்குதல் என கூறப்படுகிறது. இந்திய தூதரகத்திற்கு எதிராக அறிவிக்கப்பட்ட நாசவேலை மற்றும் தீவைப்பு முயற்சியை அமெரிக்கா வன்மையாக கண்டிக்கிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து

தமிழன்Jul 4, 2023 - 03:34:13 PM | Posted IP 162.1*****

இவனுங்க நம்ம ஊர் ஆண்ட பரம்பரை விட மோசம் போலயே. அடித்து வெளியே துரத்துங்கள்.

ஒருவன்Jul 4, 2023 - 03:08:02 PM | Posted IP 162.1*****

வேற எதோ பிரச்சனைக்கு அடுத்தவங்க வீட்டில தீ வைப்பார்களாம். முட்டா வெறி பயலுக. உங்களை எல்லாம் அமெரிக்காவில் உள்ள விட்டதே பெரிய தவறு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory