» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதம் மையம் நிறுவ ரஷ்யா முடிவு: ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை

திங்கள் 27, மார்ச் 2023 12:38:20 PM (IST)

ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதம் மையம் ஒன்றை நிறுவ ரஷ்யா முடிவு செய்துள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு கடந்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் உக்ரைன் நாட்டை அடிபணிய வைக்க பெலாரஸ் நாட்டில் அணு ஆயுத மையத்தை நிறுவ முடிவு செய்து இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தை பின்பற்றி அணு ஆயுத மையம் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள பக்முத் நகர் மீது ரஷ்யா நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதல் காட்சி வெளியாகி உள்ளது. அந்நகரில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் உருக்குலைந்து காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆயுதங்கள் பற்றாக்குறையால் ரஷ்யாவிற்கு எதிராக எதிர் தாக்குதலை தொடங்க முடியவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory