» செய்திகள் - விளையாட்டு » உலகம்
எஸ் 400 விவகாரம்: இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்கா முடிவு?
புதன் 24, நவம்பர் 2021 11:17:20 AM (IST)

இந்தியாவுக்கு பொருளாதார தடை விதிப்பதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து 5 எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 5.5 பில்லியன் டாலர் மதிப்பில் 2019-ல் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பு தரையிலிருந்து வானில் வரும் இலக்குகளை 400 கிலோ மீட்டர் தொலைவிலேயே மிக துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
இதற்கிடையில், எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பு இந்தியாவுக்கு விநியோகிக்கும் பணியை ரஷியா தொடங்கியுள்ளது. திட்டமிட்டபடி இந்தியாவுக்கு எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பு விநியோகம் தொடங்கி நடைபெற்று வருவதாக ரஷிய அதிகாரி கடந்த 14-ம் தேதி கூறினார். அதேவேளை, ரஷியாவிடம் இருந்து இந்தியா எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பு வாங்க தொடக்கம் முதலே அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
மேலும், இந்த விவகாரத்தில் இந்தியா மீது பொருளாதாரத்தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையும் மீறி ரஷியாவிடம் இருந்து இந்தியா ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கியுள்ளது. இதனால், இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதிக்கலாம் என தகவல் வெளியானது. மேலும், நட்பு நாடு என்பதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின.
இந்நிலையில், எஸ்400 விவகாரத்தில் பொருளாதார தடை விதிப்பதில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து முடிவெடுக்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியா மீது பொருளாதாரத்தடை விதிக்கும் பட்சத்தில் அது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தலாம் என்பதால் பெரும்பாலும் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போதைப் பொருள் தயாரிப்பில் இந்தியா, சீனா முக்கிய பங்கு : ட்ரம்ப் குற்றச்சாட்டு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:39:20 PM (IST)

இந்தியா உடனான போர் நிறுத்தத்தில் டிரம்ப் தலையீடு இல்லை: பாகிஸ்தான் அமைச்சர்
புதன் 17, செப்டம்பர் 2025 5:26:19 PM (IST)

நண்பர் மோடி பிறந்தநாளில் ஓர் அற்புதமான தொலைபேசி உரையாடல்: ட்ரம்ப் நெகிழ்ச்சி!
புதன் 17, செப்டம்பர் 2025 12:04:25 PM (IST)

நாய் என திட்டியதால் பெண் ஊழியர் தற்கொலை: குடும்பத்துக்கு ரூ.90 கோடி இழப்பீடு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 10:27:31 AM (IST)

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:33:58 AM (IST)

பின்லேடன் உங்கள் நாட்டில்தான் கொல்லப்பட்டார் : ஐ.நா. சபையில் பாக். மீது இஸ்ரேல் தாக்கு!
சனி 13, செப்டம்பர் 2025 5:04:44 PM (IST)
