» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானில் முகமது அலி ஜின்னாவின் சிலை குண்டு வைத்து தகர்ப்பு
திங்கள் 27, செப்டம்பர் 2021 4:36:49 PM (IST)
பாகிஸ்தானை தோற்றுவித்த முகமது அலி ஜின்னாவின் சிலை ஒன்று வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் தோன்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டவர் முகம்மது அலி ஜின்னா. அவரது சிலை பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு கடலோரம் பகுதியில் அமைந்துள்ளது. அந்த சிலையை பலூச் விடுதலை முன்னணி என்ற தடை செய்யப்பட்ட அமைப்பினர் வெடிகுண்டு வைத்து தகர்த்து உள்ளனர். பலூசிஸ்தானில் பல ஆண்டுகளாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த வாரம், சோதனை சாவடி ஒன்றில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.