» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தலிபான்களால் 3 ஆண்டுகள் முன்பு கடத்தி செல்லப்பட்ட 2 வெளிநாட்டினர் விடுவிப்பு
புதன் 20, நவம்பர் 2019 12:41:44 PM (IST)
தலிபான் பயங்கரவாதிகளால் மூன்று ஆண்டுகள் முன்பு கடத்தி செல்லப்பட்ட இரண்டு வெளிநாட்டினர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடத்தி செல்லப்பட்ட 2 பேராசிரியர்களையும் விடுவித்தால் அவர்களுக்கு பதிலாக சிறையில் இருக்கும் 3 முக்கிய தலிபான் தலைவர்களான ஆனஸ் ஹக்கானி, ஹாஜி மாலி கான் மற்றும் அப்துல் ரஷித் ஆகியோர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அதிபர் அஷ்ரஃப் கானி கடந்த வாரம் அறிவித்தார். ஆப்கன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் தலிபான்களை நேரடி பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைக்கும் முயற்சியாக அஷ்ரஃப் கானி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஆப்கன் அதிபரின் நிபந்தனையை ஏற்றுக்கொண்ட தலிபான்கள் கெவின் கிங் மற்றும் டிமோதி வீக்ஸ் இருவரையும் விடுவிக்க சம்மதம் தெரிவித்தனர். அதன்படி நேற்று காலை 10 மணியளவில் இரண்டு பேராசிரியர்களும் ஜாபுல் மாகாணத்தில் உள்ள நவ்பஹார் மாவட்டத்தில் விடுவிக்கப்பட்டனர். அவர்களை அமெரிக்க ராணுவம் ஜாபுலில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அழைத்து சென்றது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட தலிபான் ‘‘நிபந்தனையின்படி நாங்கள் பேராசிரியர்களை விடுவித்து விட்டோம். இனி சிறையில் இருக்கும் தலிபான் தலைவர்களை ஆப்கன் அரசு மற்றும் அமெரிக்கா விரைவில் விடுதலை செய்யும் என எதிர்பார்க்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடு திரும்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி கைது: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம்
செவ்வாய் 19, ஜனவரி 2021 11:50:31 AM (IST)

அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு
திங்கள் 18, ஜனவரி 2021 8:55:44 AM (IST)

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் : கட்டிட இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பலி
சனி 16, ஜனவரி 2021 9:18:20 AM (IST)

பாகிஸ்தானில் ஜன.18 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - அரசு அறிவிப்பு
வெள்ளி 15, ஜனவரி 2021 6:50:44 PM (IST)

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம்: துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரிப்பு
புதன் 13, ஜனவரி 2021 5:06:39 PM (IST)

மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம்: துணை வேந்தர் உறுதி - மாணவர்கள் போராட்டம் வாபஸ்
திங்கள் 11, ஜனவரி 2021 10:54:09 AM (IST)
