» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இனி எந்த சூழலிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: ஈரான் திட்டவட்டம்
புதன் 18, செப்டம்பர் 2019 10:19:05 AM (IST)
இனி எந்த ஒரு சூழலிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையே கிடையாது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

அத்தோடு இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வந்தால் போரை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் இனி எந்த சூழலிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என ஈரான் தலைவர் அயத்துலா அலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எந்த திட்டமும் இல்லை. சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் ஆலை தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி ஈரானுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா திட்டமிடுவது எங்களுக்கு தெரிகிறது. ஆனால் அதற்கெல்லாம் நாங்கள் பலிக்கிடா ஆக மாட்டோம். அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த பயனும் இல்லை என கூறினார் அலி.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட கூடாது : ரஷியாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
வியாழன் 12, டிசம்பர் 2019 5:40:57 PM (IST)

பேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது நிருபரின் செல்போனை பறித்த இங்கிலாந்து பிரதமர்
புதன் 11, டிசம்பர் 2019 3:35:02 PM (IST)

அமித் ஷாவுக்கு எதிராக தடை: அமெரிக்க சா்வதேச மத சுதந்திர ஆணையம் எச்சரிக்கை
புதன் 11, டிசம்பர் 2019 10:29:30 AM (IST)

ஈகுவடார் நாட்டிலிருந்து நித்தியானந்தா வெளியேறிவிட்டார்: தூதர் அறிவிப்பு!
செவ்வாய் 10, டிசம்பர் 2019 3:52:05 PM (IST)

ஹோட்டல்களில் பெண்களுக்கு தனி நுழைவாயில் தேவையில்லை: சவுதி அரசு அறிவிப்பு
செவ்வாய் 10, டிசம்பர் 2019 12:48:58 PM (IST)

உலகின் இளம் பிரதமரானார் பின்லாந்து பெண் அமைச்சர் சன்னா மரின்!!
செவ்வாய் 10, டிசம்பர் 2019 12:25:41 PM (IST)
