» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பட்டாசுக்கு முழுத் தடையா? – பசுமை பட்டாசு குறித்து அறிக்கை கேட்கிறது உச்ச நீதிமன்றம்!

வியாழன் 23, ஜூலை 2026 4:10:22 PM (IST)

பசுமை பட்டாசுகளில் உள்ள நிறை, குறைகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிப்பதால் நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக் கோரி அர்ஜுன் கோபால் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'பேரியம்' என்ற மூலப்பொருள் இல்லாமல் பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டும் என்றும், சரவெடி தயாரிக்கக் கூடாது என்றும் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, அதிகக் காற்று மாசுவை ஏற்படுத்தும் பேரியம் இல்லாத பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. இருப்பினும், பசுமை பட்டாசு என்ற பெயரில் தடை செய்யப்பட்ட பேரியம் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் அடங்கிய பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதால், நாடு முழுவதும் பட்டாசுக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், இவழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பிரசன்னா, பி.வராலே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பசுமை பட்டாசில் இருக்கும் நிறை, குறைகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விரிவான அறிக்கையை இரண்டு வாரத்திற்குள் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory