» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வளர்ந்த இந்தியா இலக்கை நோக்கித் தொடர்ந்து முன்னேறுவோம் – பிரதமர் மோடி உறுதி!

புதன் 10, ஜூன் 2026 12:23:27 PM (IST)

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்ததன் 12 ஆண்டுகள் சாதனையை முன்னிட்டு, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே தங்களது உன்னத இலக்கு எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

அத்துடன், இந்திய அரசியல் வரலாற்றில் மிக நீண்ட காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொடர்ச்சியாகப் பதவியில் இருக்கும் பிரதமர் என்ற ஜவஹர்லால் நேருவின் சாதனையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 10) முறியடிக்கிறார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் தேதி முதன்முதலில் நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடி, தற்போது தனது மூன்றாவது பதவிக்காலத்தை வெற்றிகரமாகத் தொடர்ந்து வருகிறார். தனது 12 ஆண்டுகால ஆட்சிப் பயண மைல்கல்லைத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் #12YearsOfGaribKalyan என்ற ஹேஷ்டேக்குடன் பகிர்ந்துள்ளார்.

இது குறித்துப் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு:"கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா பல உன்னத மாற்றங்களைக் கண்டுள்ளது. அந்த மாற்றங்களின் முதன்மை மையப்புள்ளியாக ஏழைகள், விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனே இருந்து வருகிறது. பல தசாப்தங்களாக நாட்டின் வளர்ச்சிப் பலன்களைப் பெறாமல் தவித்த மக்களுக்கு அரசின் அனைத்து உதவிகளும் நேரடியாகக் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 'வளர்ந்த இந்தியா' என்ற உன்னத இலக்கை நோக்கி நமது அரசு தொடர்ந்து முன்னேறும்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய மத்திய அரசின் சாதனைப் பட்டியல்:

1 இலவச உணவு தானியத் திட்டம்: மாதந்தோறும் 81 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெறுகின்றனர்.

2. பிரதமரின் வீட்டு வசதித் திட்டம்: கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் 4 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

3. ஜல் ஜீவன் மிஷன்: 10.5 கோடிக்கும் அதிகமான கிராமப்புறக் குடும்பங்களுக்கு குழாய் வழி குடிநீர் இணைப்பு.

4. பெண்கள் முன்னேற்றம் 32 கோடிக்கும் அதிகமான பெண்கள் 'ஜன் தன்' வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனர்; சுமார் 3 கோடி பெண்கள் 'லட்சாதிபதி'களாக மாறியுள்ளனர்.

5. சமூக சுகாதாரம் நாடு முழுவதும் 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு, 91 லட்சத்திற்கும் அதிகமான சுய உதவிக்குழுக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

6. திறன் மேம்பாடு & புத்தொழில் 2 கோடி இளைஞர்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்றுள்ளனர்; 10,000-க்கும் மேற்பட்ட புத்தொழில்கள் (Start-ups) அங்கீகரிக்கப்பட்டு ஆதரிக்கப்பட்டுள்ளன.

7. முத்ரா கடன் திட்டம் சுயதொழில் புரியும் மக்களுக்கு 40 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் வழங்கப்பட்டுள்ளது.

8. இலவச மருத்துவக் காப்பீடு 70 கோடிக்கும் அதிகமான மக்கள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்; 60 கோடிக்கும் அதிகமான மக்கள் இலவசச் சிகிச்சை பலன்களைப் பெற்றுள்ளனர்.

9. மலிவு விலை மருந்துகள் & தடுப்பூசி 'ஜன் அவுஷதி' மையங்கள் மூலம் 19,000 மலிவு விலை மருந்துகள் கிடைக்கின்றன; 90 சதவீதத்திற்கும் அதிகமான தடுப்பூசிச் செயல்பாடு எட்டப்பட்டுள்ளது.

நாடு தழுவிய பிரச்சாரம்: என்டிஏ அரசின் இந்த 12 ஆண்டுகால வரலாற்றுச் சாதனை நிறைவைக் கொண்டாடும் வகையில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மற்றும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரு மாத கால நாடு தழுவிய பிரம்மாண்ட பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory