» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடுகள்; குஜராத்துக்கு ரூ.6.65 கோடி அபராதம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

புதன் 26, நவம்பர் 2025 12:43:21 PM (IST)

ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடுகள் தொடர்பாக குஜராத் மாநிலத்திற்கு மத்திய அரசு ரூ.6.65 கோடி அபராதம்விதித்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீர் இணைப்புகளை வழங்கும் நோக்கத்துடன், மத்திய அரசு கடந்த 2019ல் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தைத் தொடங்கியது. இந்த திட்டத்தின் ஆரம்ப செலவு ரூ.3.60 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் அதற்கான செலவு ஏற்கனவே ரூ.4.33 லட்சம் கோடியை தாண்டிவிட்டது.

செயல்படுத்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் புகார்களால் நாடு முழுவதிலுமிருந்து வந்ததை தொடர்ந்து பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதை எடுத்து மாநிலங்களுக்கு ரூ.129.27 கோடியை அபராதம் விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. 

அதிகபட்சமாக குஜராத் மாநிலத்திற்கு ரூ.6.65 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரிபுரா (ரூ.1.22 கோடி), அசாம் (ரூ.5.08 லட்சம்), மகாராஷ்டிரா (ரூ.2.02 கோடி), கர்நாடகா (ரூ.1.01 கோடி) மற்றும் ராஜஸ்தான் (ரூ.5.34 கோடி) உள்ளிட்ட மாநிலங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory