» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராணுவத்தை அவமதிப்பது கருத்து சுதந்திரமல்ல: ராகுலுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!!

வியாழன் 5, ஜூன் 2025 12:48:38 PM (IST)

ராணுவத்தையோ, ராணுவ வீரர்களையோ அவமதித்து பேசுவது கருத்து சுதந்திரத்தில் வராது என, ராகுல் காந்திக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி., 2022 டிசம்பரில், பாரத் ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில், நாடு முழுதும் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது, அருணாச்சல பிரதேச எல்லையில், நம் ராணுவ வீரர்களை சீன ராணுவத்தினர் அடிக்கின்றனர் என தெரிவித்திருந்தார். ராகுலின் கருத்தை எதிர்த்து, பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லைப்புற சாலைகள் அமைப்பின் இயக்குநர் உதய்சங்கர் ஸ்ரீவத்ஸவா போலீசில் புகாரளித்தார்.

இதையடுத்து, ராகுல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை விசாரித்த எம்.பி., - எம்.எல்.ஏ.க்களுக்கான லக்னோ சிறப்பு நீதிமன்றம், ராகுல் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி தன் உத்தரவில் கூறியதாவது: மக்கள், பாரத் ஒற்றுமை யாத்திரை பற்றி கேட்பர்; அசோக் கெலாட், சச்சின் பைலட் பற்றி கூட கேட்பர். ஆனால், இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்தது குறித்தோ, நம் ராணுவத்தினர் தாக்கப்பட்டது குறித்தோ கேள்வி எழுப்ப மாட்டார்கள். பின், ஏன் இந்த பேச்சு.

இந்திய அரசியலமைப்பின் 19 - 1ன் ஏ பிரிவின் கீழ் பேச்சு சுதந்திரம் உறுதி செய்யப்பட்டாலும், அது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. எந்தவொரு தனி நபரையோ அல்லது நம் ராணுவத்தையோ அவதுாறு செய்யும் உரிமையை, இந்த பிரிவு வழங்காது.

ராணுவம் அல்லது ராணுவத்தினரை அவமதிக்கும் வகையில் பேசுவது கருத்து சுதந்திரத்தில் வராது. ராகுலின் கருத்துகள், நம் ராணுவத்தினரையும், அதை சார்ந்தவர்களையும் மனதளவில் பாதிக்கும் வகையில் உள்ளன. ஆகையால், லக்னோ சிறப்பு நீதிமன்ற சம்மனுக்கு எதிரான ராகுலின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

ஆனந்த்Jun 6, 2025 - 11:09:59 AM | Posted IP 104.2*****

வெளிநாட்டு ஆள் இந்திய எம் பி ஆக முடியாது என்ன முட்டாள் தனம் கூமுட்டை

இவன்Jun 5, 2025 - 06:56:18 PM | Posted IP 172.7*****

வெளிநாட்டுக்கார பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய கான் முட்டாள் குடும்பம் தான் காங்கிரஸ்

கந்தசாமிJun 5, 2025 - 03:32:48 PM | Posted IP 104.2*****

இந்திய இராணுவதின் சிந்தூர் நடவடிக்கையின் இழப்பு எவ்வளவு என்று ஏன் அரசாங்கம் தெரிவிக்க மறுக்கிறது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory