» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் குழந்தை கடத்தல் கும்பல் கைது: 2 பச்சிளம் குழந்தைகள் மீட்பு

சனி 6, ஏப்ரல் 2024 5:27:11 PM (IST)

டெல்லியில் குழந்தைகள் கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடமிருந்து கைக்குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 

குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில், சிபிஐ அதிகாரிகள் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் தீவிர சோதனையை மேற்கொண்டு வந்த நிலையில், குழந்தை கடத்தல் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 2 பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.

புது டெல்லியின் கேசவபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த குழந்தை கடத்தல் கும்பலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, அழைத்து வரும் விடியோ ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. பால் பாட்டில்களுடன், கைக் குழந்தைகள் மீட்கப்பட்டிருப்பது பலருக்கும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. இதில், குழந்தையைக் கடத்தி விற்க முயன்ற பெண்ணும், குழந்தையை வாங்க முயன்றவர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory