» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் விஜேந்தர் சிங்!

புதன் 3, ஏப்ரல் 2024 4:36:43 PM (IST)



பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் காங்கிரஸில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

இந்தியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், காங்கிரஸ் தலைவருமான விஜேந்தர் சிங் அக்கட்சியிலிருந்து விலகியதையடுத்து தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தெற்கு தில்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் விஜேந்திர சிங்.

நடிகரும் தற்போதைய எம்பியுமான ஹேமாலினி மீண்டும் போட்டியிடும் மதுராவில் கட்சியின் வேட்பாளராக விஜேந்தர் சிங் பெயர் கடந்த சில நாள்களாக பேசப்பட்டு வந்தது. ஹரியாணா, மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அரசியல் செல்வாக்கைக் கொண்ட ஜாட் சமூகத்திலிருந்து வந்தவர் விஜேந்தர் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory