» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம்

வியாழன் 21, செப்டம்பர் 2023 11:50:21 AM (IST)

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடக் கோரி கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது என்று உத்தரவிட்டது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு ஒரு முறை கூடி சூழலை ஆராய்ந்து வருகிறது என்று தெரிவித்த நீதிபதிகள், ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு நாள்தோறும் 5 ஆயிரம் கனஅடி நீர் கிடைக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பினர். காவிரி நீர் மேலாண்மை ஆணையம், தமிழக அரசுக்கு 5 அயிரம் கனஅடி நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory