» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆந்திர மாநில நிர்வாகம் விசாகப்பட்டினத்துக்கு மாற்றம்: ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு
புதன் 20, செப்டம்பர் 2023 4:55:07 PM (IST)
ஆந்திர மாநில நிர்வாகம், வருகிற விஜயதசமி அன்று, அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு மாற்றப்படுவதாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகரமாகவும் அமராவதி சட்டப்பேரவைத் தலைநகராகவும் கர்னூல் நீதிமன்றத் தலைநகரமாகவும் செயல்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் மாநில நிர்வாகத்தை விசாகப்பட்டினத்திற்கு மாற்ற வேண்டும் என்று ஜெகன் மோகன் ரெட்டி கடந்த சில மாதங்களாகவே கூறிவந்த நிலையில், அதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருகிற விஜயதசமி அன்று முதல் விசாகப்பட்டினத்தில் நிர்வாகச் செயல்பாடுகள் துவங்கும் என்று அறிவித்துள்ளார்.
தலைமை அலுவலகம் மற்றும் பல்வேறு துறைகளின் கட்டடங்களை தேர்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டு குழுவின் பரிந்துரைகளின்படி, இடமாற்றம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. முதலமைச்சரின் குடியிருப்புகள், முகாம் அலுவலகங்கள் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற டிசம்பரில் முழுமையாக இந்த இடமாற்றம் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் தாக்குதல் முறியடிப்பு: பாதுகாப்பு துறை அறிவிப்பு
வியாழன் 8, மே 2025 4:34:49 PM (IST)

அபுதாபி லாட்டரியில் ரூ.57 கோடி பரிசு: கோடீஸ்வரர் ஆன கேரள தொழிலாளி!
வியாழன் 8, மே 2025 12:16:16 PM (IST)

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பொய் செய்தி வெளியிட்ட சீன அரசு ஊடகத்திற்கு இந்தியா கண்டனம்!
வியாழன் 8, மே 2025 11:12:21 AM (IST)

பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி: உமர் அப்துல்லா பேட்டி
புதன் 7, மே 2025 3:41:28 PM (IST)

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியீடு
புதன் 7, மே 2025 12:54:12 PM (IST)

பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைத்து அழிப்பு: ஆபரேஷன் சிந்தூர் குறித்து மத்திய அரசு விளக்கம்
புதன் 7, மே 2025 12:03:23 PM (IST)
