» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெறும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

செவ்வாய் 19, செப்டம்பர் 2023 4:15:43 PM (IST)

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்தாண்டு மே 5-ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

கடந்த 2 வருடமாக நீட் தேர்வு தாமதமாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வருடம் மே மாதம் நீட் தேர்வு நடத்தப்பட்டு நாடு முழுவதும் 18 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். தமிழகத்திலும் 1 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் 2024-ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 5-ந் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதை போல உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கான ஜே.இ.இ. முதல் தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஜே.இ.இ. முதல் தேர்வு ஜனவரி மாதம் 24-ந்தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 1-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஜே.இ.இ. 2-ம் தேர்வு ஏப்ரல் 1-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory