» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழகத்துக்குத் தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகத்துக்குத் துளியும் இல்லை: துரைமுருகன்

செவ்வாய் 19, செப்டம்பர் 2023 12:28:43 PM (IST)

தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகத்துக்குத் துளியும் இல்லை என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

காவிரி நீர் தொடர்பாக புது டெல்லியில் இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை  சந்தித்துப் பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். காவிரியிலிருந்து கர்நாடக அரசு, தமிழகத்துக்கு தர வேண்டிய நீர் குறித்து மத்திய அமைச்சரிடம் விளக்கிக் கூறினோம். 

காவிரியில், கர்நாடக மாநிலத்திடம் போதுமான தண்ணீர் இருந்தும்கூட தமிழகத்திற்கு தர மறுக்கிறது.  காவிரியிலிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகத்துக்கு துளியும் இல்லை.  கா்நாடகத்தில் உள்ள தண்ணீா் இருப்பை ஆய்வு செய்து பரிசீலனை செய்த பின்னா்தான் தண்ணீா் திறக்க ஆணையம் உத்தரவிடுகிறது. ஆனால், தண்ணீா் இல்லையென கா்நாடகம் பொய் சொல்கிறது என்று துரைமுருகன் கூறினாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory