» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழ்நாடு முன்னாள் கவர்னர் ரோசய்யா காலமானார்...!
சனி 4, டிசம்பர் 2021 5:08:05 PM (IST)
தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 88.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் 1933 ஆம் ஆண்டு பிறந்த ரோசய்யா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் 2009-2010 வரை ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்-அமைச்சராக இருந்துள்ளார். மேலும், 2014-ம் ஆண்டில் கர்நாடக பொறுப்பு கவர்னராகவும் செயல்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் கவர்னர் பதவியில் இருந்து 2016-ல் ஒய்வு பெற்றதை அரசியல் களத்தில் இருந்து விலகி ஆந்திராவில் உள்ள தனது குடும்பத்தினருடன் ரோசய்யா வாழ்ந்து வந்தார். அவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோசய்யா இன்று காலமானார். வயது முதிர்வு காரணமாக ரோசய்யா இன்று உயிரிழந்தார். ரோசய்யாவின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பா.ஜ.க.வுடன் இணைந்து தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
திங்கள் 15, டிசம்பர் 2025 10:08:42 AM (IST)

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!
சனி 13, டிசம்பர் 2025 10:51:14 AM (IST)


.gif)