» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது!

சனி 19, ஜூலை 2025 5:28:50 PM (IST)

மதுரையில்  பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாநகர பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவி, தனக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாக, குழந்தைகள் உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உள்ள அதிகாரிகள், அந்தப் பள்ளிக்குச் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மாணவியின் தந்தை இறந்து விட்டதால், அவரது தாயார், 47 வயதானவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது, தாயின் இரண்டாவது கணவர் அந்த மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ், தாயின் இரண்டாவது கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory