» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு: இளஞ்சிறார் உட்பட 5 பேர் கைது
திங்கள் 23, ஜூன் 2025 11:15:21 AM (IST)
நெல்லையில் காவலரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் இளஞ்சிறார் உட்பட 5பேரை போலீசார் கைது செய்துள்னர்.
நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதான வளாகத்தில் மாநகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. வார விடுமுறை தினமான நேற்று இங்கு ஏராளமானவர்கள் குடும்பத்துடன் சென்றதால் கூட்டம் அலைமோதியது. இரவு 9 மணி அளவில் பூங்காவில் நின்ற சில இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது அங்கு குடும்பத்தினருடன் வந்த போலீஸ்காரரான மணிமுத்தாறு 9-வது பட்டாலியனைச் சேர்ந்த முகமது ரஹ்மத்துல்லா (29) இளைஞர்களை தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல், போலீஸ்காரர் முகமது ரஹ்மத்துல்லவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார், பூங்காவுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே போலீஸ்காரர் முகமது ரஹ்மத்துல்லாவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இளஞ்சிறார் உட்பட 5பேரை போலீசார் கைது செய்துள்ளனர. நெல்லையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரேஷன் கடையில் பழைய ரூ.100 நோட்டை வாங்க மறுப்பு : பெண் ஊழியர் மீது புகார்
ஞாயிறு 20, ஜூலை 2025 10:32:49 AM (IST)

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்: 28-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
ஞாயிறு 20, ஜூலை 2025 9:52:54 AM (IST)

போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றவர் மரண வழக்கு: வேறு விசாரணை அதிகாரி நியமிக்க உத்தரவு!
சனி 19, ஜூலை 2025 9:15:54 PM (IST)

மாணவிகளின் பாதுகாப்பில் திமுக அரசு அலட்சியம் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
சனி 19, ஜூலை 2025 5:34:31 PM (IST)

பகுதிநேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வரும்: அமைச்சர் அன்பில் மகேஷ்
சனி 19, ஜூலை 2025 5:29:48 PM (IST)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது!
சனி 19, ஜூலை 2025 5:28:50 PM (IST)
