» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

டிராக்டர்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்கக் கோரி தூத்துக்குடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

திங்கள் 8, ஜூன் 2026 11:56:40 AM (IST)



டிராக்டர்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்கக் கோரி தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

வேளாண்மைத் தொழிலில் பயன்படுத்தப்படும் டிராக்டர்களை முழுமையாக விவசாயக் கருவிகள் பட்டியலில் இணைத்து, அவற்றுக்கான சாலை வரி, ஜிஎஸ்டி, வாட் வரி (மற்றும் என்.சி.சி.டி உள்ளிட்ட பல்வேறு வரிகளை முற்றிலும் நீக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்குத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய அளவில் டிராக்டர்களின் டீசல் பயன்பாடு மூலம் மட்டுமே ஓராண்டில் சுமார் ரூ.56,000 கோடியை இரு அரசுகளும் வரியாக வசூலிப்பதால், விவசாயிகளின் குடும்ப வருமானத்தில் 15.20 சதவீதம் இந்த டீசல் வரிக்காகவே வீணாகிறது என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இக்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் இன்று திரண்டு வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாவட்டத் தலைவர், மாவட்டச் செயலாளர் மற்றும் உழவர்கள் தங்களின் கையொப்பமிட்ட விரிவான கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் வழியாக மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்தனர்.


மக்கள் கருத்து

BabuJun 8, 2026 - 07:18:59 PM | Posted IP 172.7*****

it kidayathu ini ithayum cancel pannitu matha velai pakuravan yella taxum katannuma?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory