» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நெல்லையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் ருசிகரம் : தந்தையும் மகனும் தேர்வெழுதினர்!!
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:13:11 AM (IST)

நெல்லையில் ஆசிரியர் தகுதித் தேர்வை தந்தையும், மகனும் எழுதிய ருசிகரம் நிகழ்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் உமர் பாரூக். அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த கல்வி தொடர்பான சட்டத்தின் படி, தற்போது பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வை எழுத வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது.
இதன் படி தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பணி தேடுபவர்கள் பி.எட். பயிலும் மாணவர்கள் என லட்சக்கணக்கானவர்கள் இன்று மாவட்டத் தலைநகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வெழுதினர். இத்தேர்வில் ஆசிரியரான உமர் பாரூக், தற்போது ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயிலும் அவர் தம் மகன் தானிஷ் ஆகிய இருவரும் தேர்வெழுதினர்.
இந்த ஆசிரியர் பணிபுரியும் பள்ளியில், இம்மாணவர் பத்தாம் வகுப்பு பயின்ற போது வகுப்பாசிரியராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் பணியைத் தக்க வைக்க தந்தையும், ஆசிரியர் பணியைப் பெற மகனும் ஒரே நேரத்தில் தேர்வெழுதியது,"தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்" என்னும் திருக்குறளை நினைவூட்டியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்தவ ஆலயத்தில் இரு தப்பினர் மோதல்: தூத்துக்குடியில் பரபரப்பு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:40:33 PM (IST)

விபத்தில்லா குமரி: லாரி ஓட்டுநர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு
சனி 6, டிசம்பர் 2025 4:59:02 PM (IST)

குமரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு நாள்: ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!
சனி 6, டிசம்பர் 2025 4:11:06 PM (IST)

கன்னியாகுமரி புதிய பேராயராக கிறிஸ்டோபர் விஜயன் தேர்வு: நாளை பதவியேற்பு விழா
சனி 6, டிசம்பர் 2025 3:51:18 PM (IST)

குமரி சுற்றுலாத்தளத்தில் போலி பார்க்கிங் ரசீது தயாரித்து பணம் வசூல் - 2பேர் கைது!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:25:06 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:24:13 PM (IST)


.gif)