» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியின் பிரதான சாலையில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை: பொதுமக்கள் கோரிக்கை!
புதன் 12, நவம்பர் 2025 10:12:15 AM (IST)

தூத்துக்குடியின் பிரதான சாலையில் விபத்துக்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து போலீசாருக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடியின் பிரதான சாலையான தமிழ்ச்சாலையில் மூன்று சிக்னல்கள் உள்ளன. இந்த மூன்று சிக்னல்களில் அவ்வப்போது விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக தூத்துக்குடி மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் வாகனங்கள் இந்த மூன்று சிக்னல்களையும் தாண்டி செல்ல வேண்டி உள்ளது.
தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே உள்ள 4 முக்கு சந்திப்பில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. பழைய பேருந்து நிலையத்தை தாண்டி குரூஸ் பர்னாந்து சிலை அருகே வரும்போது பால விநாயகர் கோவில் தெருவில் இருந்து வாகனங்கள் குறுக்கே செல்வதாலும் மேற்கு நோக்கி ஒரு வழிப்பாதையில் பிரபல ஜவுளி கடை கார் பார்க்கிங் செல்வதற்காக திரும்புவதால் அடிக்கடி இந்த பகுதியில் விபத்துக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.
எனவே தூத்துக்குடி மாநகரப் போக்குவரத்து காவல்துறை மற்றும் மத்திய பாகம் காவல்துறையும் இணைந்து குருஸ் பர்னாந்து சிலை அருகே பேரிகாடுகள் வைத்து, ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் செல்லாமல் தடை செய்து பொதுமக்கள் வாகன போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் செல்வதற்கும், விபத்துகளில் இருந்து மக்களை காப்பதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு தேதி மாற்றம்: ஆட்சியர் அறிவிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:52:13 PM (IST)

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)

நாகர்கோவில்-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் புதிய பெட்டிகளுடன் முதல் பயணத்தை துவங்கியது
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:03:13 PM (IST)

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நாளை புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம்!
சனி 13, டிசம்பர் 2025 5:55:15 PM (IST)

அரசு ரப்பர் கழகத்தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது: சீமான் வலியுறுத்தல்!
சனி 13, டிசம்பர் 2025 11:58:37 AM (IST)

குமரி மாவட்டத்தில் 1025 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான ஆணை
சனி 13, டிசம்பர் 2025 10:33:38 AM (IST)


.gif)
நான் தான்Nov 13, 2025 - 03:27:03 PM | Posted IP 162.1*****