» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் பெண்ணிடம் நகை பறிப்பு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 14, ஜூலை 2024 12:46:08 PM (IST)
தூத்துக்குடியில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மச்சாது நகர் கங்கா பரமேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் பெத்துபாண்டி இவரது மனைவி பரமேஸ்வரி (44), இவர் நாசரேத் சென்று விட்டு பின்னர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தனது ஸ்கூட்டியில் வீட்டிற்கு இன்று காலை 6 மணிக்கு சென்று கொண்டிருந்தார். மச்சாது நகரில் செல்லும்போது பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர் பரமேஸ்வரி கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலிச் செயினை பறித்துள்ளான்.
அப்போது சுதாகரித்துக் கொண்ட பரமேஸ்வரி தாலி செயினை பிடித்துக் கொள்ளவே. செயின் அறுந்து, பாதிச் செயின் கொள்ளையன் கையில் சிக்கியது. பின்னர் மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து பரமேஸ்வரி சிப்காட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து அந்த கொள்ளையனை தேடி வருகிறார். இந்த நகை பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை..!
சனி 15, பிப்ரவரி 2025 5:44:14 PM (IST)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவருக்கு 20 ஆண்டு சிறை : நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
சனி 15, பிப்ரவரி 2025 3:42:45 PM (IST)

கனிமவளங்களை கடத்த அரசே அனுமதி அளிப்பதா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
சனி 15, பிப்ரவரி 2025 11:57:45 AM (IST)

கோழிக்கோடு சி.எஸ்.ஐ. தமிழ் ஆலய பிரதிஷ்டை விழா: குமரிப் பேராயர் செல்லையா பங்கேற்பு!
சனி 15, பிப்ரவரி 2025 8:32:14 AM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் விடுதலை!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:48:59 PM (IST)

நாகர்கோவிலில் பிப்.19ம் தேதி 6வது புத்தகத் திருவிழா தொடக்கம் : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 13, பிப்ரவரி 2025 3:53:01 PM (IST)

ManashaJul 15, 2024 - 09:44:28 AM | Posted IP 172.7*****