» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கோவா, கேரளா மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட்!

திங்கள் 15, ஜூலை 2024 12:55:43 PM (IST)

மகாராஷ்டிரா, கோவா, கேரளா மாநிலங்ககளில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

இந்திய வானிலை மைய தகவலின்படி, தென்மேற்கு பருவமழையானது கீழ்நோக்கி நகர்ந்து மகாராஷ்டிரா, கோவா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் கடலோரங்களில் இந்த வாரம் நிலைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாநிலங்களில் வரும் நாட்களில் மிக கனமழை முதல் இடியுடன் கூடிய கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

கேரளாவின் மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்டும், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்தப் பகுதிகளில் 20 செ.மீ வரை மழைப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. தொடர் மழை மற்றும் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து கோவாவில் பள்ளிகளுக்கும், கேரளாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தைப் பொறுத்தவரை சதாரா, கோலாப்பூர், சிந்துதுர்க் மற்றும் ரத்னகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மும்பை மாநகரில் கனமழை வெளுத்துவாங்கி சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் எனத் தெரியவருகிறது. இதுதவிர தலைநகர் டெல்லி, நொய்டா ஆகிய பகுதிகளிலும் லேசான மழைப்பொழிவு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை மைய அதிகாரி நரேஷ் குமார், "பருவமழையானது கீழ் நோக்கி நகர்கிறது. வரும் நாட்களில் கடலோர கர்நாடகா, கேரளா மற்றும் கோவாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். இந்த மாநிலங்களில் 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யக்கூடும். டெல்லி- நொய்டா பகுதிகளில் வரும் நாட்களில் லேசான மழை பெய்யும். டெல்லிக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை.” என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory