» சினிமா » செய்திகள்

தமிழ் பேசுபவர்கள் கெட்டவர்களா? சுஹாசினியின் கருத்துக்கு அமீர் பதிலடி

புதன் 4, மே 2022 12:18:20 PM (IST)

"இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்" என்ற சுஹாசினியின் கருத்துக்கு, "தமிழ் பேசுபவர்கள் கெட்டவர்களா" என இயக்குநர் அமீர் பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை சுஹாசினி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து "தமிழ் பேசுபவர்கள் கெட்டவர்களா" என இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் அவர் "இந்தி பேச வேண்டும் என்பது பாசிசம். கலைக்கு மொழி தடை கிடையாது. தமிழ் சினிமா கலைஞர்கள் வெளி மாநிலங்களில் தமிழ் தொடர்பாக பேசுவதில்லை.

ஏனென்றால், அது அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை பறிபோக வைக்கும் என்ற அச்சம். தமிழ் சினிமாவில் உச்சநடிகர்கள் தங்களின் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதற்காக மொழி பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசுவதில்லை. இது அவர்களை நேசிக்கும் அந்த மொழி ரசிகர்களுக்கு செய்யும் துரோகமே" என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory