» சினிமா » செய்திகள்

நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நள்ளிரவில் போலீசார் சோதனை

திங்கள் 15, நவம்பர் 2021 5:38:49 PM (IST)

சென்னையில் நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து நள்ளிரவில் போலீசார் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் விஜய்யின் சென்னை நீலாங்கரை வீட்டிற்கு வெடிகுண்டு வெடிக்க உள்ளதாக  காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளது . இதையடுத்து விஜய்யின் வீட்டுக்கு விரைந்த நீலாங்கரை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்குப் பிறகு அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.  

மிரட்டல் அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை வைத்து அவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  விசாரணையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வரன் விஜய் வீட்டுக்கு மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இவர் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory