» சினிமா » செய்திகள்

ஜெய்பீம் விவகாரம்: அன்பு மணிக்கு சூர்யா பதில் கடிதம்!

வெள்ளி 12, நவம்பர் 2021 11:11:50 AM (IST)



ஜெய்பீம் படம் தொடர்பான அன்புமணி ராமதாஸின்  விமர்சனத்துக்கு நடிகர் சூர்யா பதில் கடிதம் எழுதியுள்ளார்..

ஜெய் பீம்  திரைப்படம் குறித்து நேற்றைய தினம் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்  "படைப்புச் சுதந்திரம் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த பயன்படுத்தப்படக்கூடாது” எனும் விதத்தில் பேசியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், சூர்யா இன்று அவருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, "எந்தவொரு தனிப்பட்ட நபரையோ அல்லது சமூகத்தினரையோ அவமதிக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை.நாடு முழுவதிலும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும், பேராதவும் எனக்கு இருக்கிறது.  படைப்புச் சுதந்திரம் என்னும் பெயரில் எந்த ஒரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை.

விளம்பரத்துக்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமத்துவம், சகோதரத்துவம் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory