» சினிமா » செய்திகள்

ரசிகர்களை தடுக்காதீர்கள்: விமர்சகர்களுக்குத் தயாரிப்பாளர் வேண்டுகோள்

வெள்ளி 5, நவம்பர் 2021 5:24:42 PM (IST)

"தயவுசெய்து பொதுவான ரசிகர்களைத் தடுக்க வேண்டாம்" என விமர்சகர்களுக்கு சினிமா தயாரிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தைத் தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. நேற்று (நவம்பர் 4) வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகக் கடும் எதிர்வினைகளைச் சந்தித்து வருகிறது. இதனிடையே, விஜய் நடிப்பில் வெளியான 'புலி', விக்ரம் நடிப்பில் வெளியான 'இருமுகன்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் விமர்சகர்களுக்குத் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது: "அன்பார்ந்த விமர்சகர்களே, மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சினிமா துறைக்கு வாழ்வாதாரத்துக்கான ஒரு மிகப்பெரிய மீட்சி தேவை. எனவே மதிப்பீடுகளை வழங்குவதற்கு பதில் ஆதரவு கொடுப்போம். திரையரங்குகளில் ஆனந்த் ஷங்கரின் 'எனிமி' மற்றும் சிவாவின் 'அண்ணாத்த' இரு படங்களும் முழு பொழுதுபோக்குப் படங்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. எதிர்பார்ப்புகள் வேறுபடலாம். தயவுசெய்து பொதுவான ரசிகர்களைத் தடுக்க வேண்டாம்". இவ்வாறு தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory