» சினிமா » செய்திகள்
கண்கள் குளமாகிவிட்டது: ஜெய் பீம் படத்திற்கு கமல் பாராட்டு!
செவ்வாய் 2, நவம்பர் 2021 3:45:05 PM (IST)
ஜெய் பீம் படத்திற்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்த 'ஜெய் பீம்' திரைப்படம் இன்று (நவம்பர் 2) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் சூர்யாவுடன், மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், குரு சோமசுந்தரம், தமிழ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் இந்தப் படத்துக்கு 'ஒளிப்பதிவு செய்துள்ளார்.சமீபத்தில் இந்தப் படம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் பல்வேறு பிரபலங்களும் ஜெய் பீம் படத்துக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஜெய் பீம் பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்கு குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்ந்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக் குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.